உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

RK Selvamani Requests To Help FEFSI Workers

பள்ளி கல்லூரிகளுக்கு,அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பை FEFSI வெளியிட்டிருந்தனர்.

RK Selvamani Requests To Help FEFSI Workers

இதனைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அறிக்கையை FEFSI வெளியிட்டுள்ளது.FEFSI-யில் தினக்கூலியாக 15000திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.இந்த வேலைநிறுத்ததால் அவர்களும்,அவர்கள் குடும்பத்தினரும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.தன்னிடம் பேசிய தொழிலாளி ஒருவர் தான் வேலைக்கு சென்று கொரோனவால் இறந்தாலும் பரவாயில்லை ஆனால் தன்னுடைய குழந்தைகள் பசியால் இறந்துவிடக்கூடாது என்று வேதனுடையுடன் தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

எனவே சினிமா துறையில் நல்ல நிலையில் உள்ள நல்லுள்ளம் பெற்ற நடிகர்கள்,நடிகைகள்,இயக்குனர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக்கலைஞர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்யவேண்டும் என்று FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.