நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் எந்த மாதிரியான நடிகர் என்பது குறித்தும் தான் பணத்திற்காக வேலை செய்வதே இல்லை என்பது குறித்தும் பேசியிருக்கிறார். நீண்ட காத்திருப்பதற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் பொம்மை திரைப்படம் தற்போது ரிலீசாகி இருக்கிறது. மொழி மற்றும் அபியும் நானும் உட்பட தனக்கென தனி பாணியில் அற்புதமான படைப்புகளை வழங்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த பொம்மை திரைப்படம் இன்று ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தொடர்ந்து விஷாலின் மார்க் ஆண்டனி, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் கேம் சேஞ்சர், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் எஸ்.ஜே.சூர்யாவின் கைவசம் இருக்கின்றனர். இது போக தனது கில்லர் திரைப்படத்தை விரைவில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நமது திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "இப்போது நட்சத்திரங்களாக இருக்கும் எல்லா நடிகர்களையும் எடுத்துக் கொள்வோம் ரஜினிகாந்த் அவர்கள் உட்பட… யாரையாவது எடுத்துக் கொள்வோம் எவரை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்குள்ளே இருக்கக்கூடிய ஒரு மேனரிசம் இருக்கும் அதை சில பேர் மாற்றிக் கொள்ள நினைப்பார்கள் அவர்கள் அவர்களைப் போல் தெரியக்கூடாது என நினைப்பார்கள். சில பேர் மக்களுக்கு நம்முடைய மேனரிசம் பிடித்திருக்கிறது எனவே அதை வைத்தே கொஞ்சம் தயார் செய்யலாம் என நினைப்பார்கள். இதில் நீங்கள் எந்த மாதிரியான நடிகர்?" எனக் கேட்ட போது,

“நான் எதுவுமே திட்டம் வைத்துக் கொள்ள மாட்டேன். நாம் என்ன தயார் செய்து வைத்திருக்கிறோமோ அதை தயார் செய்து வைத்திருக்கிறோம். நான் இது மாதிரி நடிக்க தான் ஆசை அது மாதிரி நடிக்கத் தான் ஆசை என்றெல்லாம் கிடையாது. ஒரு வாய்ப்பு வருகிறது ஒரு வாய்ப்பு வந்து நம் கதவை தட்டுகிறது அந்த வாய்ப்பு எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி நடிப்பேன். அது எனக்கு பிடித்தால் மட்டும் போதும், நமக்குள் இருக்கும் ஒரு ரசிகன் மாதிரி நான் அந்த கதையை கேட்பேன் அது பிடித்தால் மட்டும் போதும் அதற்குள் நாம் போய் விடுவோம். பிடிக்கவில்லை என்றால் பண்ண மாட்டேன். பணத்திற்காக நான் வேலை செய்வதே இல்லை. இதோ இந்த ஒரு 40 நாள் ஃப்ரீயாக இருக்கிறது. அதை டக்குனு யாரிடமாவது கொடுத்து காசாக்கி விடலாமா? இல்லை அந்த நாற்பது நாட்கள் நான் சும்மா கூட இருப்பேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் செய்யாதீர்கள்.”

என பதிலளித்தார். இன்னும் பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.