பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஃபேண்டஸி அட்வென்ச்சர் திரைப்படமான பிரம்மாஸ்த்ரா திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியானது.

தொடர்ந்து இயக்குனர் LUV ரஞ்சன் இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் தற்போது நடித்து வருகிறார். அதேபோல் நடிகை ஆலியா பட் நடிப்பிலும் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. 

இயக்குனர் கரன் ஜோகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா பட் தொடர்ந்து ஹாலிவுட்டில் பிரபல சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான வொண்டர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கால் கடாட் கதாநாயகியாக நடிக்கும் ஹார்ட் ஆப் ஸ்டோன் என்னும் அதிரடி ஆக்சன் திரில்லர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அலியா பட் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது ஆலியா பட் ரன்பீர் கபூர் ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை ஆலியா பட் வெளியிட்ட பதிவு இதோ…