ஓட்டு மொத்த இந்திய திரையுலகமே எக்கசக்கமான எதிர்பார்ப்பு காத்திருக்க பிரம்மாண்டத்தின் உச்சமாக பிரம்மிப்பான படைப்பாக கடந்த செப்டம்பர் மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாட பாக்ஸ் ஆபீஸிலும் 500கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பலரும் முயற்சி செய்து கைவிட்ட அமரர் கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை நிலையில், விடாமுயற்சியோடு கடின உழைப்போடு நிஜமாக்கினார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, சுந்தர சோழர், மதுராந்தகர், சேந்தன் அமுதன், ரவி தாசன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், அஸ்வின் காக்கமுன்னு, கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் - 2 அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு ஒன்று நாளை(டிசம்பர் 27) மாலை 4 மணிக்கு வெளியாகும் என லைகா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இது பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பா அல்லது இன்னும் அசத்தலான அறிவிப்புகள் வெளிவர இருக்கின்றனவா என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.