தமிழ் சினிமாவின் முன்னணி ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவிடப்பட்ட பொன்னியின் செல்வன் என்ற கனவு திரைப்படத்தை நிஜமாக்கியவர் மணிரத்னம். அமரர் கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இரண்டு பாகங்களாக தயாரித்துள்ளன.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஜெயமோகன் அவர்கள் வசனங்களை எழுத, தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனிடையே நடைபெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட பொன்னியின் செல்வன் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் புகழ்மிக்க எழுத்தாளர் அமரர்கள் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளதாக தெரிவித்தனர். 

இந்நிலையில் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த இயக்குனர் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ் கரன் இருவரும் ஒரு கோடி ரூபாய் காசோலையை கல்கி அவர்களின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினர். இந்த அழகிய நிகழ்வின் புகைப்படங்கள் இதோ…