இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 'எங்கேயும் காதல்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'மான் கராத்தே', 'அரண்மனை' உள்ளிட்ட பல முக்கிய படங்களை நடித்தார். மேலும் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகருடனும் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவரானார் ஹன்சிகா படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது ஹன்சிகா நடிப்பில் அடுத்தடுத்து 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'ரவுடி பேபி', 'கார்டியன்', 'பார்ட்னர்', '105 மினிட்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'MY3' எனும் வெப்சீரிஸிலும் ஹன்சிகா நடித்துள்ளார். விரைவில் இந்த வெப்சீரிஸ் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஹன்சிகா பிரபல தொழிலதிபர் சொஹைல் கட்டுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 பழமையான ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட திருமணத்தை தற்போது நிகழ்ச்சியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவர்களது திருமண நிகழ்ச்சி ‘ஹன்சிகாவின் லவ் ஹாதி டிராமா’ என்ற பெயரில் வரும் பிப்ரவரி 10ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த தொடருக்கு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்துள்ளார். தற்போது இந்த தொடர் வெளிவரவிருக்கும் நிலையில் ஹன்சிகா நமது கலாட்டா தமிழ் மீடியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் திருமணம் மற்றும் திருமண தொடர் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் திருமணத்திற்கு பின் திரைத்துறையில் தொடர்வது குறித்து ஹன்சிகா பேசியது,

“என்னிடம் இப்போது 7 படங்கள் கைவசம் உள்ளது. இந்த வருடமும் எனக்கானது தான்.திருமணத்திற்கு பின் திரைத்துறையில் நீடிக்க முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் வளர்ந்து விட்டோம். நாம் பெண்களை மையப்படுத்தி படங்கள் எடுக்க தொடங்கி விட்டோம் இன்று தென்னிந்தியா வட இந்தியா திரைப்படங்கள் இல்லாமல் சர்வதேச திரைப்படங்கள் என்று வளர்ந்து விட்டோம். ஆஸ்கர் போன்ற விருதுகளுக்கும் நாம் சென்று வருகிறோம். அதனால் திருமணம் முடிந்தது இதோட திரைத்துறை பயணம் அவ்வளவுதான் னு நாம நினைக்க கூடாது. ஒரு நடிகை திருமணம் செய்துகொண்டால் அவரை வாழ்த்த வேண்டும் பின் அவளுடைய அடுத்த படம் குறித்த கேள்வியை கேட்க வேண்டும். அது தான் நல்லா இருக்கும். எனக்கு நிறைய பட வாய்புகள் வந்த வண்ணம் உள்ளது. நான் என் திருமணம் முடிந்து ஐந்தே நாளில் படம் நடிக்க தொடங்கி விட்டேன்”. என்று குறிப்பிட்டார் ஹன்சிகா மோத்வானி.

மேலும் ஹன்சிகா திருமணம் மற்றும் திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..