வழக்கம்போல் இந்த முறையும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி மிகவும் ஆரவாரத்தோடு நடைபெற்று நிறைவடைந்தது முதல் முறையாக 20 போட்டியாளர்கள் நேரடியாக முதல் நாளிலேயே களமிறங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்டியாக மைனா நந்தினி மட்டுமே கலந்து கொண்டார்.
விறுவிறுப்பான போட்டிகளோடும் காரசாரமான விவாதங்களோடும் நடைபெற்ற இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். இருப்பினும் மக்களின் அபிமானம் பெற்ற போட்டியாளர்களாக திகழ்ந்த விக்ரமன் மற்றும் ஷிவின் வெற்றி பெறாதது பிக் பாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பிக் பாஸ் போட்டி குறித்தும் பிக் பாஸுக்கு பின் தனது வாழ்க்கையை குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை ஷிவின் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தன்னை பாலினத்தை வைத்து அறிமுகப்படுத்த கூடாது எனவும் அதை தான் விரும்பவில்லை எனவும் ஷிவின் தெரிவித்துள்ளார்.
“இந்த சமுதாயத்தில் என்னுடைய பாலினத்தை குறிப்பிட்டு பேச வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் சமுதாயம் அப்படி ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என நான் நினைக்கிறேன். பலமுறை நான் தெரிவித்து இருக்கிறேன் என்னை அறிமுகப்படுத்தும் போது என்னுடைய பாலினத்தை வைத்து நான் என்னை அறிமுகப்படுத்தக் கூடாது. ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவர்களை அவர்களாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்களோ? அதுபோலவே இதுவும் நடக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இது கண்டிப்பாக நடக்கும். இது மிக விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது ஏற்கனவே நடக்க ஆரம்பித்து விட்டது. அது நடக்கும் அவ்வளவுதான்” என ஷிவின் தெரிவித்துள்ளார். ஷிவினின் அந்த முழு பேட்டி இதோ…