எதிர் வீட்டில் காதலன் இருந்ததால், தினந்தோறும் கல்லூரி மாணவி உல்லாசம் அனுபவித்த நிலையில், அவர் வயிற்றில் 5 மாத கரு வளர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அருகே பீமநகரைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில், அந்த கல்லூரி மாணவியின் எதிர் வீட்டில் தங்கியிருந்த ஒரு இளைஞருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இந்த காதல், விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில், இருவீட்டார் பெற்றோருக்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால், வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்திலும், கல்லூரி முடிந்து சீக்கிரம் வீடு திரும்பும் போதெல்லாம், அந்த இளைஞரோடு, அந்த பெண் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதனிடையே, அந்த இளைஞருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

இந்நிலையில், அந்த இளம் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பயந்துபோன பெண்ணின் பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், “இளம் பெண் வயிற்றில் 5 மாத கரு இருப்பதாகவும், ஆனால், அந்த கரு உயிரோடு இல்லை.. இறந்துவிட்டதாகவும்” கூறியுள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அதற்கு, வெளிநாடு சென்ற காதலன் தான் காரணம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பெண்ணின் வயிற்றில் இறந்தநிலையிலிருந்த கரு அகற்றப்பட்டது.

இதனிடையே, கல்லூரி மாணவி கருவுற்ற விவகாரம் தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடைபெற உள்ளதைக் கருத்தில்கொண்டு, வழக்கை முடித்து வைத்தனர்.