பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை, மற்றொரு இளைஞரை மாட்டிவிட்டு, நாடகமாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், கொத்தனாராக வேலை பார்த்து வரும் சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

அதில், மூத்த மகள் பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 15 வயதான இளைய மகள், பெற்றோருடன் தங்கி, அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இதனிடையே, பெற்ற மகளிடம் எதையோ பார்த்து, காமவயப்பட்ட சரவணன், மகளிடம் தொடக்கத்தில் அத்துமீறி நடந்துள்ளான். இதில், அந்த சிறுமி தன் தந்தையே இப்படி நடக்கிறார் என்று, யாரிடமும் எதுவும் சொல்லாமல் மனதிற்குள் நோந்துகொண்டார்.

பிறகு, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல், ஈவு இறக்கமின்றி, அந்த சிறுமியைத் தொடர்ந்து பல முறை மாறி மாறி பலாத்காரம் செய்து, காமத்தை ருசித்துள்ளான்.

இப்படியாகத் தொடர்ந்து பலாத்காரம் செய்ததில், அந்த 15 வயது சிறுமி கருவுற்றார். இதனால். பதறிப்போன சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் தான் அதற்குக் காரணம் என்று கூறி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்துள்ளார்.

இதனிடையே, சிறுமியின் வயிற்றில் வளர்ந்து வந்த சிசு, வயிற்றிலேயே இறந்துவிடவே, சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, இறந்த சிசுவை வெளியே எடுத்துள்ளனர்.

பிறகு, சிசுவின் ரத்த மாதிரியும், அந்த இளைஞரின் ரத்த மாதிரியும் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு அந்த இளைஞர் காரணமில்லை என்று போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர், சிறுமியின் பெற்றோரை போலீசார் அழைத்து கடுமையாக விசாரித்ததில், தந்தையே தன் மகளைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே, பெற்ற மகளையே தந்தை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம், பட்டீஸ்வரம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.