கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது குழந்தையை, தாயே கொன்று கணவர் மீது பழி போட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கொடுவல்லியை சேர்ந்த பிரனவ் - சரண்யா தம்பதிக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், 2 வயதில் வியான் என்ற குழந்தை இருந்தது.

இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதன் காரணமாக, கணவனை விட்டுப் பிரிந்த சரண்யா, குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார்.

அப்போது, முகநூல் மூலமாகத் திருமணமாகாத இளைஞர் ஒருவருடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது, நாளடைவில், கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், காம மோகத்தில் திளைத்த சரண்யா, அந்த திருமணமாகாத இளைஞருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டார். ஆனால், அந்த உல்லாச வாழ்க்கைக்குத் தனது 2 வயது குழந்தை தடையாக இருப்பதாக அவர் உணர்ந்தார்.

இதனையடுத்து, திட்டம்போட்ட அவர்.. “தன்னுடைய குழந்தையைக் கொலை செய்து, அந்த பழியைக் கணவர் பிரனவ் மீது போட” திட்டமிட்டார்.

இதனால், கணவருடன் சமாதானம் பேசுவது போல் பேசிவிட்டு, அவருடன் 2 நாட்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மீண்டும் வழக்கம்போல் சண்டை போடுவது போல் போட்டுவிட்டு, அம்மா வீட்டிற்கு செலவாகக் கூறிவிட்டு, இரவில் கணவர் வீட்டிலிருந்து குழந்தையுடன் கிளம்பி உள்ளார்.

பின்னர், அந்த பகுதியில் உள்ள பாறையில், தன்னுடைய குழந்தையை இரவோடு இரவாக இறக்கமே இல்லாமல்.. பாறையில் மோதியும், குழந்தையின் கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளார். குழந்தை இறந்ததும், உடலை அங்குள்ள கடற்கரையில் தூக்கி வீசிவிட்டு, கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு, சரண்யா மீது சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில், தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து, சரண்யாவை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, கள்ளக்காதலுடன் வாழ்வதற்காக, 2 வயது குழந்தையின் தலையை, பாறையில் மோதி தாயே கொடூரமாகக் கொன்ற சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.