பிடித்தவர்களிடம் எல்லாம் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் மொட்டலூர் கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான பொன்னுரங்கம், விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி 41 வயதான பிரியா, அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

Teacher kills husband to have illicit relationship

இதனிடையே, பள்ளி ஆசிரியர் பிரியாவுக்கு, பள்ளியில் உடன் பணிபுரியும் சில ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சில உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் என பிடித்தவர்களிடம் எல்லாம் உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் கணவருக்கு தெரியவந்த நிலையில், இது தொடர்பாக கணவர் கேட்டுள்ளார். இதனால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மனைவியைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததுடன், தொடர்ந்து கணவர் எச்சரித்தும் வந்துள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் பிரியா, கணவரை கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, தன்னுடன் கள்ளத் தொடர்பில் உள்ளவர்களை ஏவி, கணவரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் அதிலிருந்து உயிர் தப்பி உள்ளார்.

Teacher kills husband to have illicit relationship

இதனையடுத்து, வீட்டில் கணவர் தூங்கும்போது, கள்ளத் தொடர்பில் உள்ள வேறொரு 2 பேரை வரவழைத்து, முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனாலும், அதிலிருந்தும் கணவர் தப்பித்துள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளி ஆசிரியர் பிரியா மற்றும் அவருடைய கள்ளக் காதலன்கள் சக்திவேல், அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து, 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த பள்ளி ஆசிரியர் பிரியாவுக்கு, பள்ளி மாணவர்கள் உள்பட பலருடன் கள்ளத் தொடர்பிலிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, பள்ளி ஆசிரியர் பிரியா சேலம் பெண்கள் சிறையிலும் மற்ற 2 ஆண்களும், சேலம் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, பள்ளி ஆசிரியர் ஒருவர் பிடித்தவர்கள் உடன் எல்லாம் உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.