சென்னை அருகே இளம்பெண் 2 கை குழந்தைகளுடன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதான முத்துக்குமார், 22 வயதான விஜயலட்சுமி ஆகிய இருவரும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

Mother commits suicide with 2 children in Chennai

தற்போது இந்த தம்பதிக்கு, 2 வயதில் கவிசரன் என்ற மகனும், நிஸ்வந்த் என்ற 2 மாத கைக்குழந்தையும் இருந்தனர். 

முத்துக்குமார் அந்த பகுதியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, காதல் திருமணம் செய்துகொண்டது முதல், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே, அடிக்கடி சண்டை வந்துள்ளது.

Mother commits suicide with 2 children in Chennai

அதேபோல், நேற்று இரவும் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த விஜயலட்சுமி, தனது அம்மா வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு, தனது 2 கைக்குழந்தைகளுடன் வீட்டிலிருந்து கிளம்பி உள்ளார்.

அப்போது, அவடி அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ரயில் முன் தனது குழந்தைகளுடன் திடீரென்று பாய்ந்து, தற்கொலை செய்துகொண்டார். இதில், 3 பேரின் உடல்களும் நாளா புறமும் சிதறிக் கிடந்தது. 

Mother commits suicide with 2 children in Chennai

இது குறித்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, விஜயலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.