ஒரே நேரத்தில் 2 இளைஞர்களைக் காதலித்த இளம்பெண்! போலீசார் பேசிய காதல் பஞ்சாயத்து..
By Aruvi | Galatta | 04:10 PM
ஒரே நேரத்தில் 2 இளைஞர்களைக் காதலித்த இளம்பெண் விவகாரத்தில், போலீசார்
காதல் பஞ்சாயத்துப் பேசி அனுப்பி வைத்த சபம்வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த
காதல்!” - என்ற வைரமுத்து வரிகள், பொய்துபோனது.. இந்த காதல் ஜோடியிடம் தான்.
ஒரு பெண்ணை இரு ஆண்கள் காதலிப்பதும், ஒரு ஆணை 2 பெண்கள் காதலிப்பதும் நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். முக்கோண காதல் கதைகளைக் கூட நாம் பார்த்திருப்போம். ஆனால், இது கலி காலம் என்பதற்கு, சாட்சி சொல்கிறது இந்த காதல் கதை.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில், “கேர்ள் பிரண்ட் கிப்ட் ஷாப்” என்னும் கடையை ராசிபன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த கடைக்கு அடிக்கடி வந்த சென்ற ஆஸ்மி என்ற பெண்ணிடம், ராசிபன் காதல் வயப்பட்டுள்ளார். இதனையடுத்து, இருவரும் காதலித்து நெருங்கிப் பழகி வந்தனர். பல இடங்களிலும் சுற்றி வந்தனர்.
காதலித்த பெண்ணுக்கு, தன் கடையில் உள்ள பரிசுப் பொருட்கள் தொடங்கி, தங்க ஜெயின் வரை பல பொருட்களை அந்த இளம் பெண்ணுக்கு ராசிபன் பரிசாகத் தந்திருக்கிறார்.
இந்நிலையில், சமீப காலமாக ராசிபனுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்த அந்த பெண், காதலர் தினத்தன்று கூட ராசிபனை கண்டு கொள்ளவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த ராசிபன், காதலர் தினத்தன்று காதலி வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு, அந்த பெண் நிஜன் என்ற இளைஞருடன் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த பெண்ணிடம் “இவன் யார்?” என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து, ராசிபனும் - நிஜனும் அங்கேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். மேலும், வீட்டிலிருந்து லைட்டை உடைத்து, தனது கோபத்தை ராசிபன் அப்போது வெளிப்படுத்தி உள்ளார்.
இதனால், பயந்துபோன அந்த இளம் பெண், அருகில் உள்ள குளச்சல் காவல் நிலையத்தில் ராசிபன் மீது புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, 3 பேரையும் அழைத்து போலீசார் பஞ்சாயத்து பேசி உள்ளனர். அப்போது, அந்த பெண்
ஆஸ்மி, 2 இளைஞர்களையும் காதலித்து வந்தது தெரியவந்தது.
ஆனால், அந்த பெண் ”ராசிபனை எனக்குத் தெரியாது என்று, என்னை அவன் ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்தான்” என்றும் குற்றம்சாட்டினார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ராசிபன், தான் கொடுத்த தங்க ஜெயினை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால், ஆஸ்மியோ.. “வீட்டில் நடந்த சண்டையில் டியூப் லைட் உள்ளிட்ட பொருட்கள் உடைந்துவிட்டதாகவும், அதற்கும் அந்த தங்க ஜெயினுக்கும் சரியாகப் போய்விட்டதாக” ஆஸ்மி சிறுபிள்ளைத் தனமாகக் கூறியுள்ளார்.
மேலும், ஜெயின் தொடர்பாக நீதிமன்றம் சென்று பெற்றுக்கொள்ளுமாறு போலீசார், அவரை எச்சரித்து அனுப்பினர். இதனால், மனமுடைந்த ராசிபன், காவல் நிலையம் அருகில் உள்ள குட்டி சுவரின் அருகில் தலையில் கை வைத்தபடியே அமர்ந்தார்.
பின்னர், அந்த பெண்ணையும் போலீசார் எச்சரித்து, எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.