நடு இரவில், கள்ளக்காதலன் உடன் மனைவி கசாமுசாவில் ஈடுபட்டிருந்த போது, மனைவியின் முனகல் சத்தத்தில் கண் விழித்த கணவன், அவரை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த புங்கவர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான சண்முகம், 45 வயதான மாரியம்மாள் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இவர்களது எதிர் வீட்டில் திருமணம் ஆகாத 28 வயதான ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்தார்.

இதனிடையே, 28 வயதான ராமமூர்த்திக்கும், 45 வயதான மாரியம்மாளுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இரவு வழக்கம் போல் கணவன் - மனைவி இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது, அதிகாலை நேரத்தில், மனைவியின் முக்கல் முனகல் சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ச்சியோடு கண் விழித்த கணவன், மனைவியின் முக்கல் முனகல் சத்தம் கேட்ட திசை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, பக்கத்து அறையிலிருந்து அந்த சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, அந்த ரூமின் ஜன்னல் வழியாக, அவர் எட்டிப் பார்த்துள்ளார். அங்கு, மனைவி மாரியம்மாள், ராமமூர்த்தியுடன் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு இருந்தார்.



இதனைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த சண்முகம், வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து, ராமமூர்த்தியின் தலையைத் துண்டித்து, கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்து பசுவந்தன் காவல் நிலையம் சென்ற சண்முகம், போலீசாரிடம் சரண் அடைந்தார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.