“லிவிங் டுகெதர்” வாழ்க்கை நடத்தி, காதலியை கழற்றிவிட்ட காதலன்!
By Aruvi | Galatta | 12:58 PM
காதலித்து “லிவிங் டுகெதர்” வாழ்க்கை நடத்தி, காதலியை கழற்றிவிட்ட காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணம் செய்யாமல் ஆணும் - பெண்ணும் ஒன்றாக ஒரே வீட்டில் உல்லாச வாழ்க்கை வாழும் முறையே, மேல் நாட்டு கலாச்சாரமான “லிவிங் டுகெதர்” வாழ்க்கை முறையாகும்.
இதில், ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால், மீண்டும் அந்த வாழ்க்கையைத் தொடர்வதும், பிடிக்கவில்லை என்றால், எந்த சண்டையும் போடாமல், இருவரும் புரிதலுடன் பிரிந்து செல்வதுமே “லிவிங் டுகெதர்” வாழ்க்கையாகும்.
திருமணம் செய்து, கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற கோர்ட் படிகளில் ஏறுவதைக் காட்டிலும், “லிவிங் டுகெதர்” உறவிலிருந்து பிரிவது மேலானது என்கிற எண்ணம், நம்ம ஊர் பிரபலங்களுக்கும், குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாக வளர்ந்துள்ளது.
ஆனால், அப்படிப்பட்ட “லிவிங் டுகெதர்” வாழ்க்கை முறைதான், அசைக்காத முடியாத காதலால், ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஒரு இளம் பெண், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, புதுச்சேரிக்கு வந்து தனது உறவினர் வீட்டில் தங்கியபடியே, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது, தன்னுடன் பணியாற்றிய சென்னை கிருமாம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டு, அவருடன் நெருக்கமா பழகி வந்தார். இன்னும் சில வருடங்கள் காதலித்த பிறகு, இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்திருந்தனர். இருவரின் காதலில், இருவருக்கும் தேகம் எட்டிப்பார்த்துள்ளது. காதலை காட்டிலும், காமமே நிறைந்து காணப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, இருவரும் கணவன் - மனைவி போல் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இதனிடையே, பாலஜிக்கு சென்னையில் வேலை கிடைக்கவே, அவர் சென்னைக்கு மாறி வந்துவிட்டார். இதனையடுத்து, வார விடுமுறை நாட்களில் அவர் அடிக்கடி புதுச்சேரிக்கு சென்று, அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, பின் சென்னை திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்படியாக, இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து “லிவிங் டுகெதர்” வாழ்க்கை முறையில் சுமார் 3 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளனர்.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, பாலாஜியை அந்த பெண் வற்புறுத்தி உள்ளார். ஆனால், பாலாஜி அதற்கு மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த பாலாஜி, அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி, கொலை செய்துவிடுதாக மிரட்டி உள்ளதாகத் தெரிகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் பாலாஜி மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான பாலாஜியை தேடி வருகின்றனர்.