6 மாதமாக சிறுமியை அடைத்து வைத்து, தினம் தினம் பலாத்காரம் செய்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“காமத்து இன்பம், தட்டி பறிப்பதிலா இருக்கிறது? உடன் பட்டு கிடப்பதில் அல்லவா பேரின்பம் அடங்கியிருக்கிறது!”

ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட சங்கர் ராவ், சென்னை ரயில்வேயில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி, திருவெற்றியூரில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, விசாகபட்டினம் சென்ற சங்கர் ராவ், சென்னை திரும்பும்போது அங்குள்ள பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தந்து சிரிப்பாகப் பேசி, ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர், அதிகாலை நேரத்தில் சென்னை வந்த அவர், குடியிருப்பில் உள்ளவர்களுக்கு யாருக்கும் தெரியாமல், வீட்டிற்கு அழைத்து வந்து, தனியாக ரூமில் அடைத்து வைத்துள்ளார்.

குறிப்பாக, தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் அவர், தினமும் சாக்லெட் உள்ளிட்ட வித விதமான உணவுப் பொருட்களை வாங்கி வந்து அந்த சிறுமியிடம் கொடுப்பார். அதை அந்த சிறுமி சாப்பிட்டதும், சிறுமிக்குப் போதை பொருட்களைக் கொடுத்து மயக்கமடையச் செய்துவிடுவார்.

சிறுமி மயங்கியதும், சிறுமியைத் தினந்தோறும் அனு அனுவாக கசக்கிப் பிழிந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்படியாக, மொத்தம் 6 மாதம், அந்த சிறுமியைப் போதையில் ஆழ்த்தி தினம் தினம் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல், பகலில் அந்த வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்த சிறுமி, எப்படியோ தனது பாட்டிக்கு தொலைப்பேசி மூலம், “தன்னை ஒருவர் கடத்தி வந்து, தினம் தினம் பாலியல் சித்ரவதை தருவதாக” கூறி உள்ளார்.

அதற்கு அந்த பாட்டி, “எப்படியாவது தப்பித்து தன்னுடைய ஊருக்கு வந்துவிடுமாறு” கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமி விசாகபட்டினம் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கு, பயந்தபடியே தனியாக அவர் நிற்பதைக் கவனித்த ரயில்வே போலீசார், சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

இந்த விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு, கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சங்கர் ராவை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.