உல்லாசத்திற்கு வர மறுத்த மருமகளை, மாமனார் கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் உலிபுரம் நரிகரடு கிராமத்தைச் சேர்ந்த 63 வயதான பழனி என்பவருக்கு, 45 வயதில் அறிவழகன் என்ற மகன் இருக்கிறார்.

அறிவழகனுக்கு 40 வயதில் அமுதா என்ற மனைவியும், 19 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இதனிடையே, மருமகள் அமுதா மீது, மாமனர் பழனிக்கு நீண்ட நாட்களாக சபலம் இருந்துள்ளது. இதனால், அமுதாவை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று பழனி நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அறிவழகன் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவருடைய 2 மகன்களும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனர். இதனால், அமுதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வந்த மாமனார் பழனி, அமுதாவை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அவரை துன்புறுத்தி கட்டிப் பிடிக்க முயன்றுள்ளார்.

ஆனாலும், பழனியின் உடும்பு பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அமுதா, மாமனாரின் இச்சைக்கு இணங்க மறுத்துவிட்டார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த பழனி, வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து, அமுதாவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவர் அலறித்துடித்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது, பழனி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பழனியை கைது செய்து, விசாரணை நடத்தினர்.

அப்போது, “மருமகள் அமுதாவிற்கு பலருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், இதனால் தன்னுடைய ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று கேட்டபோது, அவர் மறுத்ததால் ஆத்திரத்தில் கொன்றுவிட்டதாகவும்” கூறியுள்ளார். இதனால், அப்பகுதியில் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.