“தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து” அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவலைத் தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தியாவில் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரம் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

அதன் படி, தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொது மக்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்கத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, “ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்” என்றும், தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே இருப்பதால், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

மேலும், “தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று வல்லுநர் குழு பரிந்துரை” செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்து, படிப்படியாகக் குறையத்தொடங்கி உள்ளதால், ஊரடங்கு தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் அளிக்கப்படுமா?” என்பது குறித்து, தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

அதே போல், 7 ஆம் தேதியுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நிறைவடைய உள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, தடுப்பூசி செலுத்தும் பணி, காய்ச்சல் முகாம்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், “வரும் 7 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்படலாம்” என்றும், அப்போது தகவல்கள் வெளியானது.

முக்கியமாக, “கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை அறிவிக்க” தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.