வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே முட்புரில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசுவின் சடலத்தை மர்மநபர்கள் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள டி.டி.மோட்டூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகில் பண்ணைக்குட்டையில் உள்ள முட்புதரில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், பேர்ணாம்பட்டு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண் சிசுவின் உடலை கைப்பற்றி பரேத பரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த சிசுவின் சடலம் முட்புதரில் வீசப்பட்டதா?, அல்லது குழந்தை கொலை செய்யப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், சிசுவை வீசி சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். முட்புதரில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் டி.டி.மோட்டூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.