அதிவேகமாக நிறைவடைந்த சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் !
By Aravind Selvam | Galatta | July 16, 2019 11:30 AM IST
கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்த படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.2016-ல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம் அருவி.
சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் Firstlook கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.75 நாட்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
That's a wrap up for our #Vaazhl after 75 days of shoot in 100+ locations. Post production going on in full swing 🥳#VaazhlWrapUp@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @thambiprabu89 | @shelley_calist | @pradeepvijay | @raymondcrasta | @dhilipaction | @madhuramoffl | @DoneChannel1 pic.twitter.com/XU63mVboAU
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 15, 2019