தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து வருபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவரவிக்கும் படம் சீதக்காதி. இது அவருக்கு 25-வது படமாகும். வரிசையாக படங்கள் தரும் இவரது கடின உழைப்பு பாராட்டிற்குரியது. 

தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரனுடன் பணியாற்றப்போகிறார் என்று சமீபத்தில் வெளியான செய்தி அனைத்து சினிமா விரும்பிகளையும் திரும்பி பார்க்கச்செய்தது.

தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு விஜய் சேதுபதி தான் ஹீரோ. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார் என்ற நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.