மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்ததில்லை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியவிருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. முதியவர் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இப்படம் 25-வது படமாகும். 

இப்படத்தில் வரும் திரு.ஆதிமூலம் ஐயா அவர்களின் கதாபாத்திரத்தை மெழுகு சிலையாக உருவாக்கப்பட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்களும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்த மெழுகுச் சிலையை திறந்து வைத்ததன் மூலம் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் தலைநிமிர்ந்து நிற்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் 2.0 படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சிலை வைத்து பெருமை படுத்தினர். இதுவும் ஒருவகை ப்ரோமோஷன் என சினிமா ரசிகர்கள் பேசி வருகின்றனர்.