மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நல்ல படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் பல சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.சமீபத்தில் இவருக்கு கலைமாமணி விருது அறிவித்து தமிழக அரசு மரியாதை செய்தது.

அடுத்த மாதம் தேர்தல் வரவுள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும் அனைவரும் ஓட்டு போட வேண்டிய அவசியம் குறித்தும் பேசியுள்ளார்.இதுவரை அரசியலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டாலும் இனியாவது தெரிந்து உரிய நபருக்கு வாக்களித்து நல்ல ஆட்சியை கொண்டு வாருங்கள் என்றும் மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.