கருவிலிருக்கும் குழந்தையின் செவிக்கு எட்டிய விஜய் பாடல் !
By Sakthi Priyan | Galatta | July 25, 2019 14:22 PM IST
திரையுலகில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகராக, இதயத்து அதிபதியாய் தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். தனது 26 ஆண்டு கால நடிப்பால் 6 லிருந்து 60 வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வீட்டில் ஓர் அங்கமாய் விளங்கிவருகிறார்.
AGS நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கிவரும் பிகில் படத்தில் தற்போது நடித்துவருகிறார். படத்தின் போஸ்டரை தொடர்ந்து முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் சமீபத்தில் வெளியானது. பொதுவாக பெண் என்பவள்,
பொறுமைக்கு பூமியாய்...
பொருளுக்கு கடலாய்...
கடமைக்கு நதியாய்...
அழகுக்கு நிலவாய்...
ஆடவருக்கு அரசியாய்....
சேய்க்கு தாயாய் விளங்குபவள். அப்படி பட்ட பெண்ணினத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக்கூறிய பாடல் சிங்கப்பெண்ணே. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் எழில் கொஞ்சும் இசையில், விவேக்கின் மனம் வருடும் வரிகளில் வெளியான இப்பாடல் அமோக வரவேற்பை பெற்றது.
சரியாக 23-ம் தேதி இரவு 10 மணியளவில் பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வழக்கம் போல அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாட துவங்கினர். சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பறந்தது. அப்போது நம் விழிகளுக்கு எட்டிய ஓர் கமெண்ட், நம் ஆழ் மனதை தொட்டது. அதில் ஓர் பெண்மணி, இந்த பாடலை கேட்டு என் வயிற்றில் இருக்கும் 7 மாத குழந்தை செல்லமாக எட்டி உதைக்கிறது என்று பதிவு செய்துள்ளார். இப்பதிவு மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்நிகழ்வு தற்செயலோ அல்லது அதிர்ஷ்டமோ ? படிப்போர் மத்தியில் பிடித்த விஷயமாய் அமைந்துள்ளது. நண்பன் படத்தில் ஓர் காட்சியில் கர்ப்பிணி பெண்ணிடம் விஜய், ஆல் ஸ் வெல் என்று கூறுவார். அந்த காட்சியை நினைவு படுத்தும் வகையில் இருந்தது. திரையில் மன்னனாக இருந்தாலும், ரசிகர்களின் அண்ணானாக இருக்கும் பாக்கியம் விஜயை தவிர வேறெந்த நடிகருக்கும் அமையாது என்பதற்கு இதுவே சிறந்த சான்று.
ஊக்கமூட்டும் பாடலாக இருந்த இப்பாடல் உணர்ச்சிப்பூர்வமாகவும் மாறியுள்ளது என்று கூறினால் மிகையாகாது. இப்படிப்பட்ட ரசிகர்கள் தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் வரை அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இச்செய்தி மூலம் பெண்னினத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக்கூற காரணமாய் விளங்கிய மாதர் குலத்திற்கும், தளபதி விஜய்க்கும், பிகில் படக்குழுவினருக்கும் நன்றியை கூற கடமைப்பட்டிருக்கிறது நம் கலாட்டா.