பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்து தனது ட்விட்டர் தளத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். நடிகர்கள் கதிர், ஆனந்தி, யோகிபாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ள இப்படம் சமூகத்திற்கு மிக ஆழமான கருத்தை உணர்த்தியது என்பது அனைவரும் அறிந்தது.  

Veteran Director Cheran Appreciates Pariyerum Perumal Director Maari Selvaraj

தற்போது இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதில் முதல் படத்தில் சாதிக்கொடுமைக்கான கதையை தேர்வு செய்து சிறப்பாக இயக்கிய மாரிசெல்வராஜ்  வாழ்த்துக்கள்.   

இதுவரை சாதியம் பேசிய சினிமாக்கள் எதிர்த்து நின்று பேசியதை பாரதிகண்ணம்மா தவிர பொறுமையோடு ஹீரோவை அடங்கி நிற்கவைத்து அழுத்தமாக பதிவிட்டிருக்கிறார். நல்ல இயக்குனரை தந்த ராமிற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.   

நடிகர் தனுஷ் உடன் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கும் மாரி செல்வராஜ், அப்படத்திலும் தனது பாணியில் சமூக அக்கறை கொண்ட கருத்துடன் சினிமா ரசிகர்களுக்கு படத்தை தருவார் என எதிர்பார்க்கலாம்.