தென்னிந்திய திரை உலகில் குறிப்பிடப்படும் நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் மிக முக்கிய கதாபாத்திரங்களிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் சாதனை முயற்சியாக வெளிவந்துள்ள இரவின் நிழல் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழில் காட்டேரி, பாம்பன், கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் வரலக்ஷ்மி சரத்குமார், அடுத்ததாக நடிகை சமந்தா நடிப்பில் PAN-INDIA திரைப்படமாக தயாராகும் யசோதா, தெலுங்கில் ஹனுமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் NBK107 ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்குக்கும் நடிகை வரலக்ஷ்மி விரைவில் தொற்றிலிருந்து மீண்டுவர கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது.

இது குறித்து தனது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள நடிகை வரலக்ஷ்மி, “அனைவருக்கும் காலை வணக்கம்… எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முடிந்த வரை பாதுகாப்பாக இருந்தும் எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே என்னோடு சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கட்டாயமாக முக கவசம் அணிந்து அனைவரும் பாதுகாப்போடு இருங்கள்.” என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது குறித்து வரலக்ஷ்மி பேசிய வீடியோ…
 

Covid Positive..inspite of all precautions..actors plz start insisting on masking up the entire crew bcos we as actors cant wear masks..
Those who have met me or been in contact with me plz watch out for symptoms and get checked..
Plz be careful and mask up..covid is still here pic.twitter.com/MyegWOSQ5a

— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) July 17, 2022