கடத்தல் வழக்கில் கைதாகிறாரா வனிதா விஜயகுமார் ? விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | July 03, 2019 13:18 PM IST
பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த மூன்றாவது சீசனில் கவின்,லாஸ்லியா,ஷெரின்,வனிதா விஜயகுமார்,சேரன் என்று 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சீசனில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் கலந்துகொண்டுள்ளார்.இவர் ஆனந்தராஜ் என்பவரை 2007-ல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஜோவிதா என்ற பெண் குழந்தையும் இருந்தது.இருவரும் Divorce வாங்கி 2012-ல் பிரிந்தனர்.ஜோவிதா தனது அப்பாவுடன் தெலுங்கானாவில் வசித்து வந்தார்.
ஜோவிதாவுடன் பிப்ரவரி மாதம் சென்னை வந்த ஆனந்தராஜ் தற்போது அவரை காணவில்லை என்று தெலுங்கானா போலீஸிடம் புகார் செய்துள்ளார்.தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று EVP Film City-ல் உள்ளதால் Nazarethpet போலீஸிடம் புகார் அளித்துள்ளார் இந்த புகாரை ஏற்று அவரை எப்போது வேண்டுமானாலும் போலீஸ் அரெஸ்ட் செய்யலாம் என்று தெரிகிறது.இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.