தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலு முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்தார்.கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார்.ஆனாலும் அவர் காமெடிகள் எப்படியும் நம்மிடம் தினமும் வந்து சேர்ந்து விடும்.இவரை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

Vadivelu To Do a New Film Under Sakthi Chidambaram Direction TItled Pei Maama

இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிப்பு வந்தது.பின்னர் வடிவேலுவுக்கும் படக்குழுவினருக்கு பிரச்சனை வரவே அவர் ஷூட்டிங்கிற்கு வரவில்லை..இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து வடிவேலுவுக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டது.புலிகேசி பட பிரச்சனைகளை முடித்த பிறகே வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருமாறு ஒரு செய்தி கிடைத்துள்ளது.வடிவேலு புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.பேய்மாமா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இங்கிலீஸ்காரன்,கோவை ப்ரதர்ஸ்,சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார்.இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Vadivelu To Do a New Film Under Sakthi Chidambaram Direction TItled Pei Maama

இது குறித்த தகவல்களை அறிய படக்குழுவை தொடர்பு கொண்டோம் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அந்த போஸ்டர் Sample ஆகா செய்யப்பட்டது என்றும் தெரிவித்தனர்.வடிவேலுவின் ரெட் கார்டு பிரச்சனை முடிவுக்கு வந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள படுகிறது.