நாளை வெளியாகிறது உதயநிதி ஸ்டாலிலின் மெகா பட அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | March 03, 2022 11:22 AM IST
தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து 2021-ல் நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று MLA-வாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் கடைசியாக சைக்கோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த சில வருடங்களாக அரசியலில் செம பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.இதனை தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி,கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இவர் அடுத்ததாக பரியேறும் பெருமாள்,கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது.இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.இவற்றை தவிர படங்களை விநியோகிப்பது,தயாரிப்பது போன்றவற்றையும் செய்து வருகிறார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அறிவிப்பட்டுள்ளது.ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் மாரி செல்வராஜ் படமாக தான் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
@RedGiantMovies_ pic.twitter.com/ESD02ecriZ
— Udhay (@Udhaystalin) March 3, 2022
Tomorrow 10 Am 🖤 pic.twitter.com/z59CqkhMfj
— Mari Selvaraj (@mari_selvaraj) March 3, 2022