ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்!
By Vinesh RV | Galatta | August 29, 2018 16:47 PM IST
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் கேரளாவில் மிகப்பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதனால் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு சமீபத்தில் தளபதி விஜய் ரூ.70 லடசம் நிதியுதவி அளித்தார். மேலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கணக்கில் ரூ. 3 லட்சம் செலுத்தி மழையால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குமாறு அறிவுறித்தியுள்ளார்.
அதன்படி தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய 15 லாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு சென்றுள்ளது.
இந்த லாரி வாடகைக்காக விஜய் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ 25 ஆயிரம் ரூபாவை தனது ரசிகரான மன்ற நிர்வாகிக்கு அனுப்பியுள்ளார். இதனால் விஜய்யின் ரசிகர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இதோ இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு.