மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி! வீடியோ இதோ

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி,Tamil cinema stars deep condolences for actor mayilsamy demise | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இன்று (பிப்ரவரி 19) காலை வெளிவந்த செய்தி நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம். அசத்தலான நகைச்சுவை நடிகராக மக்களை மகிழ்வித்த நடிகர் மயில்சாமி தனது 57-வது வயதில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். சிவ பக்தரான நடிகர் மயில்சாமி நள்ளிரவு மகா சிவராத்திரி பண்டிகையை கொண்டாடிவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஏற்கனவே இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மயில்சாமிக்கு மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் தான் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் மயில்சாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கென தனி பாணியில் நகைச்சுவையை கையாண்டு மக்களின் மனதை கவர்ந்த மயில்சாமி அவர்களின் மரணத்தை ரசிகர்களாலும் திரை பிரபலங்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மயில்சாமி அவர்களின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான MS.பாஸ்கர் மறைந்த மயில்சாமி அவர்களை பார்த்து கதறி அழுதார். இது குறித்து செய்தி அவர்களை சந்தித்தபோது வருத்தத்தோடு பேசிய நடிகர் MS.பாஸ்கர், “என்னை மாமா என்று அழைத்து பேசுவான். ரோட்டில் செல்லும்போதெல்லாம் என்னை பார்த்து “டேய் மாமா” என கத்துவான். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பு கூட அவனை பார்த்தேன். “என்னடா உடம்பு சரியில்லையா?” என விசாரித்தேன். உடலைப் பார்த்துக் கொள் என சொன்னேன். “சரி மாமா” என சொன்னான். ஷூட்டிங்-க்கு வந்தால் கூட… “ஒரு முறை ஒரு அம்மா வெள்ளரிக்காய் விற்றுக் கொண்டு வந்தார்கள். அவரிடம் வெள்ளரிக்காய் என்ன விலை என கேட்டான். ஒன்று ஐந்து ரூபாய் என அந்த அம்மா சொன்னார்கள். அதற்கு கூடையோடு என்ன விலை என மயில்சாமி கேட்டான். அதற்கு அந்த அம்மா சொன்ன விலையை விட 200 - 300 ரூபாய் கூட கொடுத்து வாங்கி அதை வாங்கி எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். யாருக்காவது எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். ரொம்ப வெள்ளந்தியான மனுஷன்” என கலக்கத்தோடு பேசினார்.

தொடர்ந்து வந்த இயக்குனர் பார்த்திபன் அவர்களும் நடிகர் மயில்சாமிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “இன்னும் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய பாலு - சரோ என்ற இரண்டு பறவைகள் இந்த வீட்டில் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு எனக்கு நெருக்கமான ஒரு நண்பர். தானம் செய்வதற்கு நிறைய பணம் தேவையில்லை பதவி தேவையில்லை மனம் இருந்தால் போதும் நான் இப்போது இந்த இரங்கல் செய்தி சொல்வதற்கு காரணமே ஒரு நண்பருடைய மறைவு மட்டுமே அல்ல. அந்த நண்பர் என்னவாக வாழ்ந்திருந்தார். அவருக்கு கிடைத்த பத்தாயிரம் ரூபாயில் ஒரு 2000 ரூபாயை எடுத்து போய் யாருக்காவது உதவி செய்ய முடியுமா இன்னும் நிறைய பேருக்கு அவர் உதவி செய்து கொண்டே இருந்திருப்பார். அவர் மறைவின் மூலம் நான் நினைப்பது என்னவென்றால் அந்த உதவிகள் இப்போது நின்று போய்விடும். அது ஒன்றுதான் எனக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.” என இயக்குனர் பாஸிபன் தெரிவித்துள்ளார். 

மேலும் நடிகை கோவை சரளா, நடிகர் முனீஸ் காந்த், ரமேஷ் கண்ணா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நகைச்சுவை நடிகர் செந்தில், நடிகர் ராதாரவி, வையாபுரி, நடிகர் ஜெயராம், நடிகர் கார்த்தி, நடிகர் நாசர், நடிகர் போண்டாமணி, நடிகர் மன்சூர் அலிகான், கூல் சுரேஷ், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் நேரில் வந்து நடிகர் மயில்சாமிக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தும் அந்த வீடியோ இதோ…
 

சினிமா

"அமைதியா HARD WORK பண்ணுங்க RESULT சத்தம் போடட்டும்!"- சிலம்பரசன்TRன் லேட்டஸ்ட் மாஸ் பதிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சினிமா

"வாரிசு வெற்றிக்கு தளபதி விஜய் கொடுத்த முத்தம்!"- ட்ரெண்டாகும் பாடலாசிரியர் விவேக் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

கையெழுத்து இயக்கத்தில் இணைந்த விஜய் சேதுபதி-மாரி செல்வராஜ்-ஐஸ்வர்யா ராஜேஷ்... போதையற்ற தமிழ்நாடு உருவாக்க ஒன்றிணையும் நட்சத்திரங்கள்!
சினிமா

கையெழுத்து இயக்கத்தில் இணைந்த விஜய் சேதுபதி-மாரி செல்வராஜ்-ஐஸ்வர்யா ராஜேஷ்... போதையற்ற தமிழ்நாடு உருவாக்க ஒன்றிணையும் நட்சத்திரங்கள்!