லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா-37. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

இப்படத்தின் டைட்டில் புத்தாண்டு அன்று காப்பான் என பெயரிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் வரும் ஜனவரி 9-ம் தேதியிலிருந்து துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். பிப்ரவரி மாதம் வரை காப்பான் பட ஷூட்டிங் நடக்கும் என்று பேசப்படுகிறது.