இரண்டாம் பாகத்திலும் வெற்றி கூட்டணி ! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | July 02, 2019 17:54 PM IST
2015ல் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற Sci-Fic திரைப்படம் இன்று நேற்று நாளை.மிகவும் குழப்பமான சயின்ஸ் பிக்ஷன் கதையை மக்களுக்கு புரியும்படி எளிமையாக சொன்னதால் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது என்று படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.சி.வி.குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு முதல் பாகத்தின் இயக்குனர் ரவிக்குமார் கதை எழுத அவரது உதவியாளர் எஸ்.பி.கார்த்திக் இயக்குகிறார்.
தற்போது இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஹீரோ மற்றும் காமெடியனான விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் இருவரும் இன்று நேற்று நாளை 2விலும் நடிப்பார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
We are very excited to announce The same whacky cast @TheVishnuVishal & @actorkaruna joining together for the super hit Indru nettru naalai ‘s sequel #indrunettrunaalai2#VishnuVishal17@Ravikumar_Dir @spkarthikid @icvkumar @onlynikil @GhibranOfficial @dineshkrishnanb pic.twitter.com/2IpBOIUikd
— Thirukumaran Ent., (@ThirukumaranEnt) July 2, 2019