சிவகார்த்திகேயனுடன் இணையும் அருவி பட இயக்குனர் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | June 03, 2019 13:04 PM IST
கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்து வருகிறார்.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.இந்த விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.
சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்குவார் என்று அறிவித்தார்.கனா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.அதேபோல் தற்போது இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அருண் பிரபுவுடனான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.