Go To Takkar Movie News »
Takkar Movie
Close
Go To Takkar Movie News »

"அட அறிவு கெட்ட முட்ட..!"- மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ஆயுத எழுத்து பட அனுபவத்தை பகிர்ந்த சித்தார்த்! கலகலப்பான வீடியோ இதோ

மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து பட அனுபவம் பற்றி பேசிய சித்தார்த்,siddharth shared about experience with mani ratnam in ayutha ezhuthu | Galatta

இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் நடிகர் சித்தார்த் நடிப்பில் பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக தயாராகி இருக்கும் டக்கர் திரைப்படம் நாளை ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியின் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சித்தார்த், தனது சொந்த தயாரிப்பில் சித்தா மற்றும் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கும் டெஸ்ட், பெயரிடப்படாத ஒரு புதிய ரொமான்டிக் திரைப்படம், மீண்டும் டக்கர் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.கிரிஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் என அடுத்து வரும் 18 மாதங்களுக்கு பிசியாக அடுத்தடுத்து வரிசையாக அசத்தலான படங்களில் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சித்தார்த் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் தனது திரைப் பயணத்தின் பல சுவாரசியமான நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பெரிய LED திரையில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த் - திரிஷா இருவரையும் வைத்து ஒரு காட்சியை இயக்குனர் மணிரத்னம் படமாக்கும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. இது குறித்து பேசிய சித்தார்த், “இந்த காட்சி வந்து எங்க சார் ஒரு அழகை பார்ப்பது மாதிரி எங்க சார் ஒரு பாடலை எடுப்பது மாதிரி யாராலும் எடுக்க முடியாது. மணி சார் உடைய கற்பனை எவ்வளவு அழகாக இருக்கும் என்றால் அந்த கற்பனையிலிருந்து ஒரு சிறு இலையைக் கிள்ளி ஒரு பாடலாக எடுத்தீர்கள் என்றால் இந்த பாடல் "நீ யாரோ நான் யாரோ பாடல்". இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கே ஒரு இயக்குனர் என்றால் என்ன என்பதை இந்த ஒரு புகைப்படத்தில் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் நடிகர்கள் என்றால் என்ன என்பதையும் இந்த ஒரு புகைப்படத்தில் தெரிந்து கொள்ளலாம். நிறைய பேருக்கு புரியாது. என்னது த்ரிஷாவுடன் காதல் காட்சியா ஜாலி மாமா என்பார்கள். “அட அறிவு கெட்ட முட்ட படபடக்குற வெயிலில் கடல்ல இருக்கிற மணல்ல அங்க படுக்க வச்சு ஒரு பெரிய படைப்பாளி இந்த மூஞ்சியும் அந்த மூஞ்சியும் எந்த ANGLEல் வைத்தால் பார்க்கிற மூஞ்சிக்கு பிடிக்கும்” என யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது இந்த மூஞ்சியும் என்ன யோசிப்பது என்று தெரியாமல் இருக்கிறது. அந்த மூஞ்சி அப்பாடா அடி விழுந்தால் அவளுக்கு தான் விழும் அவள் தான் அருகில் இருக்கிறாள் என்ற ஒரு பயத்தில் இருக்கும். நாங்கள் எல்லாம் அப்போது சின்ன பசங்க... நான் அவருடைய அசிஸ்டன்ட் அவர் அவருடைய அசிஸ்டன்ட்டை அழகாக காட்டி கொண்டிருக்கிறார். இதெல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் மணி சார் ஒரு பாஸ் தான் எப்போதும்” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சித்தார்த்தின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ஆஞ்சநேயருக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! திரையரங்குகளில் இருக்கை காலியாக விட படக்குழு முடிவு – விவரம் உள்ளே..
சினிமா

ஆஞ்சநேயருக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! திரையரங்குகளில் இருக்கை காலியாக விட படக்குழு முடிவு – விவரம் உள்ளே..

சமய சண்டைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.. – படக்குழு வெளியிட்ட புது வீடியோ உள்ளே
சினிமா

சமய சண்டைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.. – படக்குழு வெளியிட்ட புது வீடியோ உள்ளே

சினிமா

"இந்தியாவின் முதல் தலைசிறந்த ALL TIME PAN INDIA STAR கமல் சார் தான்!"- வைரலாகும் சித்தார்த்தின் அட்டகாசமான வீடியோ இதோ!