இறைவனை மகிழ்விக்க சென்றார் கிரேசி மோகன் !
By Sakthi Priyan | Galatta | June 10, 2019 15:42 PM IST
திரையுலகின் புகழ் பெற்ற வசனகர்த்தாவாக விளங்கியவர் நடிகர் கிரேசி மோகன். இவர் நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பொய் கால் குதிரை எனும் படத்தில் வசனகர்த்தாவாக திரை வாழ்க்கையை துவங்கினார்.
69அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராசன், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் பணியாற்றிய படங்களில் நகைச்சுவை அதிகம் இருக்கும் வகையில் எழுதுவதில் சிறப்பு பெற்றவர்.
இந்நிலையில், 66 வயதான நடிகர் கிரேசி மோகன் உடல் நல குறைவால் காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது நிலைமை கவலைக்கிடம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது 2 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்தி தெரியவந்தது. தனது வசனத்தால் அனைவரையும் சிரிக்க வைத்தவர், இன்று அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளார்.