நடிகர் மாதவன் சிறையில் உள்ளார் !
By Sakthi Priyan | Galatta | October 31, 2018 12:43 PM IST
இந்திய விண்வெளி மையத்தில், திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் வடிவமைத்தலில் முக்கிய விஞ்ஞானியாகப் பணியாற்றியவர் நம்பி நாராயணன்.பணம் பெற்று கொண்டு ராக்கெட் ரகசியங்களை வெளியே தெரிவித்துவிட்டார் என்று கடந்த 1994-ம் ஆண்டு கைது செய்தனர்.
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி வழக்கு தொடுத்து, 20 ஆண்டுகளாக போராடி வருவோரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார்.
இதனையடுத்து தற்போது வெளியாகிய இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதில் நடிகர் மாதவன் சிறையில் இருப்பது போன்ற காட்சிகளை டீஸரில் வைத்திருக்கின்றனர் படக்குழுவினர். இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களுக்கு பிறகு மாதவன் நடிப்பில் தயாராகும் இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.