தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஜோக்கர்,ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன்,  கதாநாயகியாக நடித்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் சமீபத்தில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸானது.இதனை அடுத்து இடும்பன்காரி திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

முன்னதாக மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி இயக்கத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.

நடிகர் மம்முட்டி தனது மம்முட்டி கம்பெனி சார்பில் தயாரித்து நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக நடிகை ரம்யா பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவு இதோ...