நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் மீடியா வாழ்க்கையை தொடங்கி தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக சின்னத்திரையை கலக்கி வருபவர் வைஷு சுந்தர்.டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான இவர் அதன் மூலம் ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் தோன்றி ரசிகர்களின் கவனம் ஈர்க்க தொடங்கினார்.

இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரன் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து தனது துள்ளலான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் வைஷு சுந்தர்.இந்த சீரியல் சில காரணங்களால் கைவிடப்பட்டாலும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் ராஜா ராணி 2 தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் வைஷு,இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.இவர் தற்போது தெலுங்கில் குங்குமப்பூவு என்ற சூப்பர்ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக வைஷு சுந்தருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்