விஷாலின் துப்பறிவாளன் 2 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | April 15, 2019 13:04 PM IST
சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து அயோக்யா படத்தின் ரிலீசுக்காக விஷால் காத்துக்கொண்டிருக்கிறார்.இதற்கு அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்,இதனை அடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்ற தகவலும் வலம் வருகிறது.இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம் துப்பறிவாளன்.இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இருப்பதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் வேலைகள் துவங்கி விட்டது என படக்குழுவினர் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.சுந்தர் சி படப்பிப்பில் இருக்கும் விஷாலை சந்தித்து இந்த படத்தினை உறுதி செய்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It’s officially confirmed by @VishalKOfficial that director #Mysskin will team up again for #Thupparivalan2. #Mysskin went to #Cappaddocia where #Vishal and #SundarC are shooting for their untitled film. This is a candid moment shared among them. pic.twitter.com/gO2pNZ1KIB
— Johnson PRO (@johnsoncinepro) April 14, 2019