"கூட நின்னதுக்கு நன்றி!"- பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின் வடிவேலுவின் காமெடி காட்சியோடு பிரதீப் ஆண்டனியின் முதல் ரியாக்ஷன் இதோ!

பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின் பிரதீப் ஆண்டனியின் முதல் ரியாக்ஷன்,pradeep antony first reaction after evicted from biggboss tamil season 7 | Galatta

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கங்களில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை பகிர்ந்து பிக் பாஸ்க்கு பிறகு தனது முதல் ரியாக்ஷனை பதிவிட்டு இருக்கிறார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நகர்ந்த இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் மிக முக்கிய போட்டியாளராக வலம் வந்தவர் பிரதீப் ஆண்டனி. ஆரம்ப முதலே நான் எல்லாரையும் காலி பண்ண தான் வந்திருக்கிறேன். இருக்கும் எல்லாரும் என்னை காலி செய்து விடுவார்கள். எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது என அட்ராசிட்டியோடு ஆட்டத்தை ஆரம்பித்த பிரதீப் ஆண்டனி மிக சிறப்பாகவே பிக் பாஸ் விளையாடினார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் பிக் பாஸ் ரூல்ஸ் என பல இடங்களில் குறிப்பிட்டு பேசி பிக்பாஸின் சட்ட திட்டங்களிலிருந்து பிக்பாஸை விளையாட வேண்டிய நுணுக்கங்கள் வரை மொத்தமும் கரைத்துக் குடித்தவர் போலவே மிகத் தெளிவாக விளையாடிய பிரதீப் ஆண்டனி கடந்த வாரம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஒட்டுமொத்த போட்டியாளர்களும் பிரதீப் ஆண்டனி தங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்ததால் அவர் வெளியேறினார். ஆனால் இந்த அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் முன்பு பிரதீப் ஆண்டனி மிகவும் வலிமையான ஒரு போட்டியாளர். அச்சுறுத்தலை விட மிகப்பெரியதாக, இந்த கடினமான போட்டியாளரை சமாளிப்பது மிகச் சிரமமானதாக போட்டியாளர்களுக்கு இருந்தது என்பது உணர முடிந்தது. இது ஒரு புறம் இருக்க தொடர்ந்து அடாவடித்தனமாக தன் பாணியில் பேசும் பிரதீப் ஆண்டனி பல இடங்களில் கெட்ட வார்த்தை பேசுவது, தரக்குறைவாக பேசுவது, லவ் கன்டென்ட் தொடர்பாக பேசுவது என பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும் ஆளானார். அதன் இறுதியாக கடந்த வார சனிக்கிழமை எபிசோடில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக நின்று உரிமைக்குரல் எழுப்பிய நிலையில் அது குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களிடம் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு உள்ளிருக்கும் பெரும்பான்மையானோர் பிரதீப் ஆண்டனி இருக்கக் கூடாது என ரெட் கார்ட் கொடுத்ததால் டைட்டில் வின்னராக வெற்றி பெற எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் ஜொலித்த பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். 

பிக்பாஸில் எடுக்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு பல்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்களும் கிளம்பி இருக்கின்றது. “மற்றவர்கள் எல்லோரும் அவ்வளவு நல்லவர்களாக இல்லை… பிரதீப் ஆண்டனி மட்டுமே மிகவும் மோசமானவர் அல்ல… இப்படியாக குற்றச்சாட்டுகள் வைக்கும் போது பிரதீப் ஆண்டனியின் கரியரே பாதிக்கப்படும்… பிரதீப் ஆண்டனி தரப்பில் இருக்கும் நியாயங்கள் என்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை… ஒருதலை பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டது…” என சோசியல் மீடியாவில் பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்கள் ஆதரவு குரல் எழுப்பினர். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கங்களில் வடிவேலுவின் கலகலப்பான ஒரு நகைச்சுவை காட்சியை பதிவிட்டு, "என்னுடைய விளையாட்டிற்கு சமூக வலைதளங்களில் இருக்கும் ஆதரவை பார்க்கும் போது இப்படி தான் தோன்றுகிறது. கூட நின்னதுக்கு நன்றி என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல ஆர்டிஸ்ட்டா ஆக ட்ரை பண்றேன்" எனக் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதீப் ஆண்டனியின் அந்த பதிவு இதோ…
 

How I feel seeing the social media response for my game 🤣

Kooda ninnathuku nandri 🙏 Ennala mudinja alavuku nalla artist ah aga try pandren 🙏#NallaIrunga #AduthaVelaiyaPapoam pic.twitter.com/AE0IHc4ocz

— Pradeep Antony (@TheDhaadiBoy) November 5, 2023