வாடிவாசல்: சூர்யாவுடன் இணைந்து இயக்குனர் அமீர் நடிப்பதற்கான காரணத்தை விவரித்த இயக்குனர் வெற்றிமாறன்! ட்ரெண்டிங் வீடியோ

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் அமீர் நடிப்பது பற்றி பேசிய வெற்றிமாறன்,vetrimaaran reveals ameer character in vaadivaasal with suriya | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் சூர்யா கூட்டணியின் வாடிவாசல் திரைப்படத்தில் இயக்குனர் அமீர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து மாயவலை திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டார். முன்னதாக, இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் மாயவலை திரைப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் பல முக்கிய விஷயங்களை பத்திரிகையாளர்கள் முன்பு பகிர்ந்து கொண்டனர். அப்படி இயக்குனர் அமீர் பேசியபோது, 

“வடசென்னை படத்திற்கு எப்படி அழைத்தாரோ அதே மாதிரி தான் வாடிவாசல் படத்திற்கும்… நாங்கள் பேசுவதே மிகவும் குறைவாக தான் இருக்கும் . அப்படித்தான் ஒரு நாள் "சூர்யாவுடன் உங்களுக்கு எப்படி?" என்று கேட்டார். "ஏன் வெற்றி?" என்றேன். "நடிக்கிறீர்களா?" என்று கேட்டார். "உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே" என்று சொன்னேன். அப்படித்தான் வாடிவாசல் படத்திற்குள் வந்தேன்.” என தெரிவித்தார். தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, “வாடிவாசல் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எனக்கு வடசென்னை திரைப்படத்தில் இவர் (இயக்குனர் அமீர்) ராஜனாக நடிக்க வேண்டும் என இருந்தபோது நான் அவருக்கு சில INPUTS கொடுக்க வேண்டும் என தோன்றியது. ஆனால் வாடிவாசல் படத்தை பொருத்தவரைக்கும் இதில் இவர் இருந்தால் எனக்கு அவரிடம் இருந்து நிறைய INPUTS கிடைக்கும் என தோன்றியது. அதனால் என்னுடைய வசதிக்காக நான் அவரை கேட்டேன் அவர் நடிக்கிறேன் என்றார்.” என பேசி இருக்கிறார். 

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்து தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கான மிகச்சிறந்த படைப்புகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக கடந்த மார்ச் மாத இறுதியில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை - பாகம் 1 திரைப்படமும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது . நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்க மிக முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த விடுதலை - பாகம் 1 திரைப்படத்தின் தொடர்ச்சியாக பாகம் 2 தற்போது தயாராகி வருகிறது. அடுத்த சில வாரங்களில் விடுதலை பாகம் 2 வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இதுவரை ஜல்லிக்கட்டு குறித்து பெரிதும் அறியப்படாத பக்கங்கள் குறித்து பேச இருக்கும் இந்த வாடிவாசல் திரைப்படத்தின் மிக முக்கிய சிஜி பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மெக்கட்ரானிக்ஸ் முறையில் ஒரு காளையை வாடிவாசல் பட குழுவினர் உருவாக்கி இருப்பதாகவும் தெரிகிறது. விடுதலை பாகம் 2 படத்தின் ரிலீஸுக்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் எழுதி இருக்கும் இறைவன் மிகப் பெரியவன் எனும் திரைப்படத்தை இயக்குனர் அமீர் இயக்குகிறார். இதனிடையே தான் இயக்குனர் அமீர் கதையின் நாயகனாக நடிக்கும் மாயவலை திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிறைய சுவாரசியமான விஷயங்களை பேசிய இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் அமீர் அவர்களின் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் வீடியோ இதோ...