தமிழ் சினிமா எனும் கலைதாய் கண்டெடுத்த காவிய புதல்வர்களுள் ஒருவர் கவிஞர் கபிலன் வைரமுத்து. இவரது அற்புதமான எழுத்துக்களால் படிப்போரின் மனதை வருடி வருகிறார். திரைப்படங்களில் பாடல் மற்றும் வசனம் எழுதும் கபிலன், நாவல் எழுதும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். 

Popular Writer Kabilan Vairamuthu Reveals The Suitable Stars For His Upcoming Novel Characters

பூமராங் பூமி, உயிர்ச்சொல், மெய்நிகரி என்ற மூன்று அற்புதமான நாவலை விருந்தாக படைத்தார். தற்போது புதிய நாவல் ஒன்று எழுதி வருகிறார். இந்த நாவல் குறித்து அவரிடம் நம் கலாட்டா குழு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது, இப்படைப்பு பற்றிய தகவல்களை நம்முடன் பகிர்ந்தார் கபிலன்.

Popular Writer Kabilan Vairamuthu Reveals The Suitable Stars For His Upcoming Novel Characters

நாவலின் ஆரம்ப கட்ட பணியில் இருப்பதாக தெரிவித்தவர், தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறினார். இவர் எழுதி வரும் இந்த கதையில், நான்கு முக்கிய பாத்திரங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தார். கதையை சுற்றி வரும் அந்த பாத்திரங்களுக்கு எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

Popular Writer Kabilan Vairamuthu Reveals The Suitable Stars For His Upcoming Novel Characters

அஜித், விஜய்சேதுபதி, அனுஷ்கா ஷர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். இவர் எழுதிய மெய்நிகரி என்ற நாவலை தழுவி. இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் கவண் படம் வெளியானது. தற்போது இந்த படைப்பும் படமானால் திரை ரசிகர்களுக்கு விருந்து தான்.

Popular Writer Kabilan Vairamuthu Reveals The Suitable Stars For His Upcoming Novel Characters

கபிலனின் இந்த படைப்பு வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

Popular Writer Kabilan Vairamuthu Reveals The Suitable Stars For His Upcoming Novel Characters