செம போரான தொடக்கம் ! ஐபிஎல் குறித்து பிரபல நடிகர் கருத்து
By Aravind Selvam | Galatta | March 24, 2019 11:44 AM IST
கோடையின் பெரிய திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது.தொடக்க ஆட்டத்தில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 17 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து.இதனை சேஸ் செய்த சென்னை அணி 18 ஓவர்களில் தான் வெற்றி பெற்றது.ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க பேட்டிங் செய்ய முடியாமல் வீரர்கள் திணறினர்.
இரு பெரிய அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.ஆனால் போட்டி மந்தமாக செல்ல பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.இதற்கு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷ்ணு விஷால் கிரிக்கெட் பற்றி அதிக ஆர்வம் கொண்டவர்.இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட விஷ்ணு விஷால் இந்த ஐபிஎல்க்கு இது மிகவும் போரான துவக்கமாக இருந்தது ஆனால் சென்னைக்கு இது நல்ல மேட்ச் என்று தெரிவித்துள்ளார்.மேலும் சேப்பாக்கம் ஸ்டேடியம் விரைவில் பழையபடி உயிர்பெறும் என்று எதிர்பாக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.