வடிவேலு எவ்வளவு பெரிய லெஜெண்ட்னு தெரியும்... மாமன்னன் ரிலீஸ் அறிவிப்பு குறித்த அதிரடி அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்! வைரல் வீடியோ

மாமன்னன் ரிலீஸ் அறிவிப்பு குறித்த அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்,mari selvaraj opens about maamannan release announcement and vadivelu | Galatta

தமிழ் சினிமாவின் மிக குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தனக்கே உரித்தான ஸ்டைலில் மிக அழுத்தமான கதை களங்கள் கொண்ட தரமான திரைப்படங்களை வழங்கி ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கர்ணன். தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தனது திரைப்பயணத்தில் மூன்றாவது திரைப்படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரான படம் மாமன்னன். 

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் மாமன்னன் படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 4வது திரைப்படமாக தயாராகிறது வாழை. நடிகர் கலையரசன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோருடன் 4 சிறுவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் பூஜை உடன் தொடங்கப்பட்ட வாழை திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் வாழை திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நாவி ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. 
 
இதனிடையே அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் மன்றம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவை திறந்து வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது மாமன்னன் படம் குறித்த பல முக்கிய தகவல்களை பகிர்ந்தார். அந்த வகையில், மாமன்னன் திரைப்படம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என கேட்டபோது, "மாமன்னன் திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. சீக்கிரமாக இந்த வாரத்திலேயே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இருக்கும். என்னுடைய திரைப் பயணத்தில் நடிகர் நடிகைகள் எல்லோரும் கிடைத்து ஒரு பிரம்மாண்டமான படமாக இருக்கும். அது மட்டுமல்லாமல், இன்று இருக்கக்கூடிய அரசியலை பேசக்கூடிய, நான் விருப்பப்பட்டு இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா? என ஆசைப்பட்ட ஒரு படமாக மாமனிதன் திரைப்படம் இருக்கும்" என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து வைகைப்புயல் வடிவேலு அவர்களின் கதாபாத்திரம் குறித்து கேட்ட போது, "என்னுடைய படம் மாரி செல்வராஜ் படத்தில் நடிகர்கள் எப்படி இருப்பார்கள் என்பது போல வழக்கமாக நாம் பார்க்கும் வகையில் அவர் இருக்க மாட்டார் முற்றிலுமாக வேறு ஒரு கட்டத்தில் இருப்பார். அந்த மாதிரி முயற்சி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும். அவர் எவ்வளவு பெரிய ஒரு லெஜெண்ட் என்பது படத்தை பார்க்கும் போது தெரியும்." என பதில் அளித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ...
 

சினிமாக்காரங்கனாலே ஒரு பொம்பள பொறுக்கினு ஒரு இமேஜ்... தனது முதல் திருமணம் குறித்து பேசிய பப்லு பிரித்திவிராஜ்! சிறப்பு பேட்டி இதோ
சினிமா

சினிமாக்காரங்கனாலே ஒரு பொம்பள பொறுக்கினு ஒரு இமேஜ்... தனது முதல் திருமணம் குறித்து பேசிய பப்லு பிரித்திவிராஜ்! சிறப்பு பேட்டி இதோ

'ஏன்டா LATE முண்டம்!'- இயக்குனர் சிகரம் Kபாலச்சந்தர் போல் பேசிய பப்லு ப்ரித்வி ராஜ்... சுவாரஸ்யமான வீடியோ உள்ளே
சினிமா

'ஏன்டா LATE முண்டம்!'- இயக்குனர் சிகரம் Kபாலச்சந்தர் போல் பேசிய பப்லு ப்ரித்வி ராஜ்... சுவாரஸ்யமான வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காதது ஏன்?- முக்கிய காரணத்தை பகிர்ந்த பப்லு ப்ரித்வி ராஜ்! வீடியோ இதோ
சினிமா

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காதது ஏன்?- முக்கிய காரணத்தை பகிர்ந்த பப்லு ப்ரித்வி ராஜ்! வீடியோ இதோ