K-13 திரைப்பட விமர்சனம் !
By Sakthi Priyan | Galatta | May 03, 2019 14:00 PM IST
அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியான படம் K-13. முதற் படம் மாதிரியே இல்லை அந்த அளவிற்கு சரியாக தனது பணியை செய்திருக்கிறார் இயக்குனர். ஒரு சைக்காலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு தேவையான காட்சிகளை கச்சிதமாக சேர்த்திருக்கிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் முழு ஈடுபாட்டுடன் நடிக்கும் அருள்நிதியின் நடிப்பு பிரமாதம். கதை முழுக்க முக்கிய ரோலில் பயணிக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஒரு இடத்தில் கூட பிசிறு தட்டாமல் நடித்திருந்தது சிறப்பு என்றே கூறலாம்.
படத்தின் முதல் கட்சியிலேயே கதைக்குள் நுழைகிறோம். இன்டெர்வலுக்கு முன்பு வரும் CCTV கொண்ட காட்சிகள் கதையின் ஓட்டத்தை வலுப்படுத்துகிறது. படத்தில் இரண்டாம் பாதியில் ஷ்ரத்தாவின் பிளாஷ்பேக்கை சரியாக கொண்டு சேர்த்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியில் சுவாரஸ்யமான விஷயத்தை புகுத்தி ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துகிறார்.
எடிட்டிங், ஒளிப்பதிவு படத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது என்றே கூறலாம். இசையமைப்பாளர் சாம் CS-ன் பின்னணி இசை ஓரளவுக்கு ஓட்டுமளவிற்கு இருந்தாலும், பாடல்கள் சில இடங்களில் வீரியம் குறைகிறது. படம் முடிந்த பின்பும் வரும் ஸ்டோரி போர்டு எண்டு கார்டு பிரமாதம். குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்பை தந்துள்ளனர் படக்குழுவினர்.
கலாட்டா ரேட்டிங் - 2.75/5