'பிரச்சனையா மாத்துறது நான் தான்!' 'எனக்குத் தெரிந்த ஒரே வழி!'- சண்டைகள் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! வீடியோ இதோ

தங்களுக்குள்ளான சண்டைகள் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி - ஆர்த்தி,jayam ravi and aarti shared about their fights galatta tamil | Galatta

தனக்கென தனி பாணியில் அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையிலான நல்ல தரமான கதைக்களங்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து மக்களின் மனம் கவர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன் மற்றும் JR30 ஆகிய திரைப்படங்கள் தற்போது வரிசையாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி தனது வாழ்க்கை மற்றும் திரைப் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஜெயம் ரவியுடன் அவரது காதல் மனைவி ஆர்த்தியும் கலந்து கொண்டு நமது சிறப்பு நேர்காணலில் பதில் அளித்தார். அந்த வகையில், ஜெயம் ரவி அவர்களிடம், “கல்யாணத்திற்கு பிறகு இரண்டே இரண்டு வார்த்தை தான் சரி மா SORRY மா வாழ்க்கையே முடிந்து விடும் என சொல்வார்கள் அந்த மாதிரி ஏதாவது செய்திருக்கிறீர்களா?” என கேட்டபோது, “ஆமாம் அதுதானே… வேறு என்ன இருக்கிறது... நம்ம தப்பு பண்ணாமல் இருந்தால் கூட நாம் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுதான் உண்மை. இல்லை அதுதானே காதல். நம்ம பிரச்சினை நம் இருவருக்கும் இல்லையே… பிரச்சனையை தானே தீர்க்க வேண்டும் நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது... அப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது அதை நிறுத்துவதற்கு என்ன வழி வேண்டுமானாலும் நாம் கையாளலாம். நான் எனக்குத் தெரிந்த வழி வந்து “சாரி”. சாரி என சொல்லிவிட்டால் சண்டை முடிந்து விடும்" என ஜெயம் ரவி தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஆர்த்தி, “உண்மை என்னவென்றால் அவர் சண்டை போட மாட்டார். நான் தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பேன். அவர் ரொம்ப ஈசி கேரக்டர்... எதையும் கடினமானதாக எடுத்துக் கொள்ள மாட்டார் நான் தான் ஒரு விஷயத்தை பெரியதாக எடுத்துக் கொள்வேன். அந்த விஷயத்தை யோசித்து யோசித்து அதை ஒரு பிரச்சனையாக மாற்றுவது நான் தான். அவர் ரொம்பவும் CHILLED OUT... சண்டை அவரால் வராது... அப்படி சண்டை போட்டாலும் அவர் உடனடியாக முடித்து வைக்க தான் பார்ப்பார். நான் தான் ரொம்ப நேரம் இழுத்து பண்ணுவேன். அவர் சண்டை போடுவதற்கான ஒரு ஆள் கிடையாது. சண்டை போடுவது நான் தான்.” என பதிலளித்தார். ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கலகலப்பான கேள்விகளுக்கு அசத்தலாக பதிலளித்த ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் அட்டகாசமான வீடியோ இதோ…
 

விஜய் ஆண்டனியின் பக்கா மாஸ் அவதாரமாக வரும் பிச்சைக்காரன் 2... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

விஜய் ஆண்டனியின் பக்கா மாஸ் அவதாரமாக வரும் பிச்சைக்காரன் 2... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் SSசக்கரவர்த்தி காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் SSசக்கரவர்த்தி காலமானார்! சோகத்தில் திரையுலகம்

இந்த அன்னைகளின் வாழ்த்துக்கள் உங்களுக்காக தளபதி விஜய்... விஷாலின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! வைரல் வீடியோ இதோ
சினிமா

இந்த அன்னைகளின் வாழ்த்துக்கள் உங்களுக்காக தளபதி விஜய்... விஷாலின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! வைரல் வீடியோ இதோ