ரொமாண்டிக்கான தருணத்தை RECREATE செய்த ஜெயம் ரவி - ஆர்த்தி... ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நிறைந்த காதல்! வைரல் வீடியோ இதோ

ரொமாண்டிக்கான தருணத்தை RECREATE செய்த ஜெயம் ரவி - ஆர்த்தி,Jayam ravi and aarti recreated their romantic memories with rose | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இந்த 2023-ஆம் ஆண்டின் முதல் படமாக கடந்த மார்ச் மாதம் அகிலன் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற அகிலன் திரைப்படத்தை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று 500 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், இரண்டாம் பாகமும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவி அனைத்து ரசிகர்களின் இதயங்களிலும் மன்னனாக சிம்மாசன விட்டு அமர்ந்து இருக்கிறார். 

தொடர்ந்து இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் இறைவன், இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் ராஜேஷ்.M இயக்கத்தில் JR30 உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஜெயம் ரவியின் அவரது காதல் மனைவி ஆர்த்தியும் கலந்து கொண்டு நம்மோடு உரையாடினார். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருக்கும் ரோஜா பூ கொடுத்து, "இதை எப்படி பயன்படுத்த போகிறீர்கள் என்பது தான் உங்களுடைய காதல் தெரிய போகிறது…" என நாம் கேட்க, 

"அவங்க (ஆர்த்தி) தலையில் வைக்க வேண்டும் என ஆசையாக தான் இருக்கிறது ஆனால் ஹேர் ஸ்டைல் கலைந்து விடுமே.." என கலகலப்பாக பேசிய ஜெயம் ரவி தொடர்ந்து பேசியபோது, "அவங்களுக்கு (ஆர்த்தி) இது பிடிக்கும்... வெளிநாட்டில் போய்க்கொண்டிருக்கும் போது… நம்ம ஊரில் தி நகரில் தானே பூவெல்லாம் விற்பார்கள் அங்கு தானே போய் வாங்க வேண்டும். வெளிநாட்டில் அப்படியெல்லாம் இல்லை. அங்கங்கே வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள். காதலின் குறியீடு அது. "கொஞ்சம் முன்னாடி போயேன் நான் வந்துடறேன்" என சொல்லிவிட்டு நைசாக போய் ஒரு ஐந்து டாலர் கொடுத்து பூ வாங்கி பின்னால் மறைத்து வைத்து எடுத்து வந்து "இதோ அங்க பாரு இங்க பாரு" என பேச்சு கொடுத்துக் கொண்டு முன்னால் வந்து பூவை நீட்டுவேன்" என ஜெயம் ரவி அவர்கள் சொன்னதும், ரசிகர்கள் அதை இப்போது RECREATE செய்யும்படி கேட்டனர். உடனடியாக ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பூ கொடுக்கும் தங்களது காதலின் அழகிய தருணத்தை அப்படியே ஜெயம் ரவி - ஆர்த்தி RECREATE செய்தனர். கலகலப்பாக சென்று கொண்டிருந்த ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்ட மேடை இந்த நிகழ்வால் காதலால் நிறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த அட்டகாசமான வீடியோ இதோ…
 

அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் SSசக்கரவர்த்தி காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் SSசக்கரவர்த்தி காலமானார்! சோகத்தில் திரையுலகம்

இந்த அன்னைகளின் வாழ்த்துக்கள் உங்களுக்காக தளபதி விஜய்... விஷாலின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! வைரல் வீடியோ இதோ
சினிமா

இந்த அன்னைகளின் வாழ்த்துக்கள் உங்களுக்காக தளபதி விஜய்... விஷாலின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! வைரல் வீடியோ இதோ

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு... காரணம் இதுதான்! விவரம் உள்ளே
சினிமா

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு... காரணம் இதுதான்! விவரம் உள்ளே