நெல்சன் சார் திட்ட கூப்பிடுறார்ன்னு நெனச்சேன்!- ரஜினிகாந்தின் ஜெயிலர் ஷூட்டில் நடந்தது என்ன? ட்ரெண்டாகும் துணை நடிகர் சீனுவின் பேட்டி இதோ

ஜெயிலர் பட ஒரே சீனில் பிரபலமடைந்த துணை நடிகர் சீனுவின் சிறப்பு பேட்டி,jailer movie junior artist seenu about jail scene with rajinikanth | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. முன்னதாக கடந்த மாத இறுதியில் நடைபெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் பேசியபோது, ஒரு முக்கிய காட்சி படப்பிடிப்பில் அதிக டேக்குகள் எடுத்த ஒரு துணை நடிகருக்கு பதிலாக அந்த காட்சியில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்ததாகவும், இதனை கவனித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அந்த துணை நடிகரின் கனவுகளை கலைத்து விட வேண்டாம் என சொல்லி மீண்டும் அந்த துணை நடிகரை அழைத்து வந்து அந்த காட்சியில் அவருக்கு அருகில் நிற்க வைத்து அந்த துணை நடிகர் தோளில் கை போட்டு ஒரு வசனம் பேசியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த காட்சி திரையில் வந்த போது திரையரங்குகளில் அது குறித்து ரசிகர்கள் பேசிய படி கைத்தட்டி தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட காட்சியில் நடித்த துணை நடிகர் சீனு தற்போது நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்களது தோளில் கை போட்டு நிற்கும் அந்த ஷாட் நிறைய பேர் அதை மிகவும் பாசிட்டிவாக சொல்கிறார்கள் அந்த தருணம் எப்படி இருந்தது?” என கேட்டபோது, “ஜெயில் செட் போட்டு இருக்கிறார்கள்… நீங்கள் பார்த்து இருப்பீர்கள்… தலைவர் என்ட்ரி ஆகிறார். எல்லோரும் வரிசையாக நிற்கிறார்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டு வருகிறார் வந்து ஒரு வில்லனை மிரட்டி விட்டு திரும்பி ராஜாஜி ராஜன் இந்த ராஜா என்ற பாடலை பாடுவார் இப்போது அவர் அருகில் வரும் போது நான் என்னுடைய வரியை எடுக்க வேண்டும் அதற்குள் அவர் என்னை கிள்ளி முத்தம் கொடுத்து விட்டார். அதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அந்த சந்தோஷத்தில் நான் பேச வேண்டிய வார்த்தையை மறந்து விட்டேன். பின்னர் மீண்டும் அந்த வசனம் பேசக்கூடிய காட்சி வருகிறது அப்போதும் பதட்டத்தில் விட்டுவிட்டேன். தலைவர் என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறார். இப்படியே அந்த காட்சி 4-5 டேக்குகள் என போய்விட்டது. அதிக வெயில் நிறைய பேர் இருக்கிறார்கள் தலைவர் வேறு காத்திருக்கிறார். எனவே அந்த நேரத்தில் எனக்கு பதிலாக வேறு ஒருவரை மாற்றி விட்டார்கள். பின்னர் ரூமுக்கு போய் விட்டேன். எத்தனையோ கோடி பேர் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறார்கள் எனக்கு கிடைத்த வாய்ப்பை இப்படி தவற விட்டு விட்டேனே என மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த வலியோடும் வேதனையோடும் நான் இருந்தபோது ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் சார் வந்தார். உங்களை சார் கூப்பிடுகிறார் என்றார். ஒருவேளை நெல்சன் சார் என்னை திட்டுவதற்காக கூப்பிடுகிறார் என்னை நினைத்து போனேன் அங்கு போனால் தலைவர்... அப்படியே அவரைப் பார்த்ததும் கொஞ்ச நேரத்துக்கு முன்பு நான் அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் தலைவரை பார்த்தவுடன் போய்விட்டது. கூப்பிட்டு நன்றாக நடிக்க வேண்டும். நீங்கள் நன்றாக வருவீர்கள் முதலில் பயப்படாதீர்கள் முதலில் பயப்படுவதை விடுங்கள் நீங்கள் நன்றாக வர வேண்டும் என ஆசிர்வாதம் செய்தார். நீங்கள் பார்த்திருப்பீர்கள் கேரம் போர்டு விளையாடுவார்கள் அந்த இடத்தில் நிற்க வைத்தார்கள். ஷாட் அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சரி பக்கத்தில் தான் நிற்க வைத்திருக்கிறார்கள் என நின்று கொண்டிருந்தேன். அதுவே பெரிய சந்தோஷம் திடீரென்று பார்த்தால் தோலில் கை போட்டு ஒரு டயலாக் பேசுவார் அங்க பாருங்க என்று சொன்னார் வேற லெவல் சார் அது வேற லெவல் இதுதான் சார் இதுதான் அந்த இடத்தில் நடந்தது” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சீனு அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.