TRP தொல்லை தாங்க முடியவில்லை - இயக்குனர் வெங்கட்பிரபு பதிவு !
By Sakthi Priyan | Galatta | May 08, 2019 12:00 PM IST
பொதுவாக இயக்குனர்களின் பெயர் பலகை வரும்போது தான் ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் படம் முடிந்தவுடனும் ப்ளூப்பர் காட்சிகளால் ரசிகர்களை திரையரங்கில் கட்டி போடும் வித்தை தெரிந்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு.
தற்போது STR வைத்து மாநாடு படம் இயக்கவுள்ளார். மே மாதம் முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதென தகவல் வெளிவந்தது.
நேற்று சென்னை மும்பை இடையேயான ஐபில் போட்டி நடைபெற்றது. சென்னை அணி தோல்வியடைந்ததால், வருத்தத்தில் காணப்பட்டனர். ஆட்டம் விறுவிறுப்பாக சென்றதால் ரசிகர்கள் நொடிக்கு நொடி பதட்டமாகவே இருந்தனர். இதுகுறித்து இயக்குனர் VP, இந்த TRP தொல்லை தாங்க முடியல பா என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.